அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???

Go down

காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்??? Empty காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???

Post by devid Sat Oct 23, 2010 9:05 am

ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்..

என் சுயநினைவை கிழித்துக்கொண்டு ச்சோவென பெய்கிறது மழை

முகத்தில் அறைகிறது காற்று

மழையும் நிற்கப் போவதில்லை..

இந்த காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???

கைகளை கேடயமாக்கி சுருண்டு கொள்கிறேன்

இந்த இரவு விடியாமலே போய்விட்டால்???

அறையெங்கும் அவநம்பிக்கைகள்

இறுதி நிமிடங்களில் இரவு - அதைக்

கிழிக்கும் ஒளிக்கீற்று வரவேண்டும்

சூரியனை மிரட்டலாம்தான்...எடுபடுமா?

அவநம்பிக்கைகள் மீது வெறுப்பு படர்கிறது

கருப்பையின் கதகதப்பிற்கு ஏங்கிக்கிடக்கிறேன்

மழைச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது

கண்ணுக்குள் கருமை நிறைந்திருக்கிறது

இந்த கருமைக்குள் தொலைந்து விடுவேனோ...

நிசப்தத்தை கிழிக்கும் என் எண்ணங்களின் கூக்குரல்

வெளிச்சம் தானாய் வராது விழிக்காத வரையில்

அதிர்ந்து எழுகிறேன், மெல்லிய வெளிச்சம் அறையெங்கும்..

நம்பிக்கை துளிர்க்கிறது...

இனி தொலைந்து விடமாட்டேன்...

எனக்குபிடித்த கவிதை
ப . டேவிட்சுரேஷ்
என்றும் அன்புடன்
[You must be registered and logged in to see this link.]
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum