எகிப்தைப் போன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடாத்த முயன்றால் என் கைத்துப்பாக்கிதான் பதில் சொல்லும்: அமைச்சர் மோ்வின் சில்வா
Page 1 of 1
எகிப்தைப் போன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடாத்த முயன்றால் என் கைத்துப்பாக்கிதான் பதில் சொல்லும்: அமைச்சர் மோ்வின் சில்வா
எகிப்தைப் போன்று இலங்கையிலும் ஆட்சிமாற்றம் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்த முயன்றால் எனது கைத்துப்பாக்கிதான் அவர்களுக்குப் பதில் சொல்லும் என்று அமைச்சர் மோ்வின் சில்வா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டு இலங்கையில் ஆட்சிமாற்றம் கோரி யாராவது ஆர்ப்பாட்டங்கள் நடாத்த முயன்றால் தனது கைத்துப்பாக்கியின் குண்டுக்கு அவர்கள் பலியாக நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் தேவைக்கும் அதிகமாக ஜனநாயகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், பேரணிகள் நடாத்த, அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க, வேலை நிறுத்தங்களில் ஈடுபட, அரசாங்கத்தை விமர்சிக்க என அனைத்து வகையான சுதந்திரமும் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
அப்படியான சூழ்நிலையில் அதற்கு மேலதிகமாக வேறு என்னதான் தேவை என்று கேள்வியெழுப்பிய அவர், அரசாங்கத்துக்கு எதிராக சதிசெய்ய முயன்றால் முதலாவது குண்டு தனது கைத்துப்பாக்கியிலிருந்தே தீர்க்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்
இலங்கையில் தேவைக்கும் அதிகமாக ஜனநாயகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், பேரணிகள் நடாத்த, அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க, வேலை நிறுத்தங்களில் ஈடுபட, அரசாங்கத்தை விமர்சிக்க என அனைத்து வகையான சுதந்திரமும் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
அப்படியான சூழ்நிலையில் அதற்கு மேலதிகமாக வேறு என்னதான் தேவை என்று கேள்வியெழுப்பிய அவர், அரசாங்கத்துக்கு எதிராக சதிசெய்ய முயன்றால் முதலாவது குண்டு தனது கைத்துப்பாக்கியிலிருந்தே தீர்க்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்
rajeshwary- மட்டுறுத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|