ஜனாதிபதி தனியாக வீதியில் சென்ற போது 3000 பாதுகாப்பு உத்தியோத்தகர்கள் கடமையில்...
Page 1 of 1
ஜனாதிபதி தனியாக வீதியில் சென்ற போது 3000 பாதுகாப்பு உத்தியோத்தகர்கள் கடமையில்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனியாக வீதியில் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், குறித்த வீதியில் சுமார் 3000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி அமைச்சர்கள் வாகனத் தொடரணியில் சென்று மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்திய போதிலும், அவரது உறவினர்களும் நண்பர்களுமே அதிகளவில் இவ்வாறு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சகலரும் ஒன்றிணைந்து ஒழுக்கத்துடன் செயற்பட்டால் விரைவில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மக்கள் ஆட்சி ஒன்றை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசாங்க ஆதரவு ஊடகங்கள் சில ஐக்கிய தேசியக் கட்சியில் பிளவினை ஏற்படுத்த முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி அமைச்சர்கள் வாகனத் தொடரணியில் சென்று மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்திய போதிலும், அவரது உறவினர்களும் நண்பர்களுமே அதிகளவில் இவ்வாறு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சகலரும் ஒன்றிணைந்து ஒழுக்கத்துடன் செயற்பட்டால் விரைவில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மக்கள் ஆட்சி ஒன்றை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசாங்க ஆதரவு ஊடகங்கள் சில ஐக்கிய தேசியக் கட்சியில் பிளவினை ஏற்படுத்த முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|