அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

:love: பொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மறுப்பு:love:

Go down

:love: பொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மறுப்பு:love:  Empty :love: பொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மறுப்பு:love:

Post by VeNgAi Mon Apr 04, 2011 9:15 am

பொலிஸ் அதிகாரங்களையும் காணி அதிகாரங்களையும் வழங்க முடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேசரிவார இதழுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்பதாகவும் அவர் கூறினார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும்,அரசாங்கத்திற்கும் இடை யில் பல சுற்றுப் பேச்சுவார்த் தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்வுத் திட்டமாக காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் முன்வைத்துள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்தின் ஒரு அங்கமாகவுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அதிகாரங்கள் இரண்டினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும், இதற்கு அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. காணி அதிகாரங்களும், பொலிஸ் அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கவேண்டிய முக்கிய கட்டமைப்புகளாகும்.

இதுகுறித்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில்,

தமிழத் தேசியக் கூட்டமைப்பு யோசனைத் திட்டமாக முன்வைத்து கோரியுள்ள காணி அதிகாரங்களையும், பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க முடியாது. எனினும் பொலிஸ் அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டிய ஒரு அதிகாரக் கட்டமைப்பாகும். பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. அத்தோடு காணி அதிகாரம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதன் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum