*~*'பொன்னியின் செல்வன்' டிராப் ஆகிவிட்டதா?!*~*
Page 1 of 1
*~*'பொன்னியின் செல்வன்' டிராப் ஆகிவிட்டதா?!*~*
'பொன்னியின் செல்வன்' டிராப் ஆகிவிட்டதா?!
அரசல் புரசலாக வெளிவந்த தகவல்தான். கிட்டத்தட்ட இப்போது உறுதியாகியிருக்கிறது. 'ராவணா' படத்தையடுத்து மணிரத்னம் இயக்கவிருந்ததாக கூறப்பட்ட 'பொன்னியின் செல்வன்' டிராப் ஆகிவிட்டதாம். ராஜஸ்தானில் ஆரம்பித்து கோவை வரைக்கும் தரை வழிப்பயணமாகவே சென்று லொகேஷன் பார்த்து வந்த மணிரத்னம், தனது உழைப்பையெல்லாம் இந்த படத்திற்காக கொட்டிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, இந்த படத்தின் கதை-வசன உதவிக்கு முன்னணி எழுத்தாளர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். விஜய், மகேஷ்பாபு, ஆர்யா, விஷால், ராஜ்கிரண், அனுஷ்கா என்று இந்த படத்திற்காக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகளையும் தேர்வு செய்து அவர்களிடம் பேச்சு வார்த்தையையும் முடித்திருந்தார் மணி. இவ்வளவு கடந்த பிறகுதான் இப்படி ஒரு செய்தி. பின்னணியில் கூறப்படும் பல்வேறு காரணங்களில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்காக ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும் நான் சொன்ன பிறகு வந்தா போதும் என்று கூறிவிட்டாராம். அதே நேரத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்கும் எண்ணத்தோடு அதற்கான வேட்டையிலும் இறங்கிவிட்டதாக கிசுகிசுக்கிறது கோலிவுட். சாருக்கு இது போதாத காலமோ என்னவோ......
Tamilkings- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|