அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரிஷபம் 01-01-2011 TO 31-12-2011

Go down

ரிஷபம் 01-01-2011 TO 31-12-2011  Empty ரிஷபம் 01-01-2011 TO 31-12-2011

Post by Admin Sat Jan 01, 2011 9:04 am

எப்பொழுதும் புன்சிரிப்பும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டு ஓரளவு நல்ல பலன்களை வழங்க காத்திருக்கிறது . உங்களது தனித்தன்மை இவ்வருடம் பிரகாசிக்கும் .எப்பொழுதும் புது முயற்சியும் புதிய விஷயங்களை கற்பதிலும் ஆர்வம் திறமையும் அதிகரிக்கும் .எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடுமையாக உழைக்கும் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும் .இதுவரை நடக்காமல் தள்ளிப்போன நல்ல விஷயங்கள் இவ்வருடம் நடக்க வாய்ப்பு அமையும் .

பேச்சில் சாமத்தியம் கூடும் .ஆரம்பகல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் உயர் கல்வி பயிலுபவர்கள் மட்டும் படிப்பில் மிக அதிக கவனம் தேவை .இடையில் தடங்கள் ஏற்பட்டு பின் கல்வி தொடர வாய்ப்பு அமையும் .எவ்வளவு சம்பாதித்தாலும் இவ்வருடம் பெரிய அளவில் சேமிப்பை தராது .எதிலாவது முதலிடு செய்ய வேண்டிவரும் .ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தனவரவு பொருள் வரவு கிட்டும்.

புதிய தொழில் தொடங்க ஒரு சிலர்க்கு சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறப்புகளால் நன்மையும் அவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும் . உடன் பிறந்தவர்களுக்கு சுப காரியம் நடக்க வாய்ப்பு அமையும். இடம் ,பொருள் , வீடு , மனை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் பொழுது கவனமாக பார்த்து வாங்கவும் .சொத்து வாங்குவதில் கவனம் தேவை .வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக சென்று வரவும் .புதிய வண்டி வாங்குவதற்கு பதில் பழைய வண்டி வாங்குவது ஒரு சிலர்க்கு நன்மை பயக்கும் .தாயாரால் ஒரு சிலர்க்கு மன வருத்தமும் ,நிம்மதியும் கெடும்.

காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் , சந்தோஷகரமாகவும் அமையும் . ஒரு சிலர்க்கு காதல் கனிந்து திருமணம் நடக்கும் . குழந்தை பேறு இல்லாதவர்கள் பரிகாரம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு குழந்தைகளால் மனவருத்தமும் அவர்களால் அவமானமும் , பிரச்சனைகளும் ஏற்படும். பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் கவனமாக முதலிடு செய்யவும் . ஆரம்பத்தில் லாபம் ஏற்பட்டாலும் இறுதியில் முதலை இழக்க நேரிடும் . எனவே கவனமாக முதலிடு செய்யவும் . தொண்டு நிறுவனங்கள் , சமுக சேவகர்கள் பொது வாழ்க்கையில் கவனம் தேவை இல்லையேல் அசிங்கப்பட நேரிடும். அரசியலில் இருப்பவர்கள் மிக அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் இல்லையேல் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போக கூடும் .எனவே கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . கலை துறையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வருமானம் , பெயர் , புகழ் அந்தஸ்து கிட்டும் .

இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் .நல்ல பெயர் போன கம்பனிகளில் வேலை செய்ய சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலர்க்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . சிலருக்கு வெளிநாட்டில் வேலை அங்கேயே மேல் படிப்பு அமையும் . அடுத்தடுத்து நல்ல கம்பெனிக்கு வேலைக்கு செல்ல சந்தர்ப்பம் அமையும் . வேலையில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும் . பார்க்கும் வேலையில் திருப்தி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும் . வராத பணம் , கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரும் . எதிர்பார்த்த இடங்களில் கேட்டவுடன் பணம் கடன் கிடைக்கும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் அமையும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை .உடலில் அடி வயிறு , முழுங்காலுக்கு கீழ் உள்ள பாகங்கள் ,கண் ,கல்லீரல் இவற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை உடனடியாக பார்த்தால் நலம் .

இதுவரை தள்ளி போன திருமணங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படும் .எதிரிகள் விஷயத்தில் மிக அதிக கவனம் தேவை .உடன் பணிபுரிபவர்களிடம் மிக கவனமாக பேசிப் பழகுதல் வேண்டும் . உயர் அதிகாரிகளிடம் கவனமாக இல்லையேல் அவர்களால் பிரச்சனைகள் ஏற்படும் .வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தராது .வெற்றி ஏற்பட்டாலும் நிலையான வெற்றியாக இராது . அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு தொல்லைகளும் ,பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு அமையும் .எனவே கவனம் தேவை . பட்டமேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு படிக்க ஒரு சிலர்க்கு வாய்ப்பு அமையும் .வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா விரைவில் வந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும் .அடிக்கடி தெய்வ தரிசனம் ஆலய தரிசனம் அமையும் .பார்க்கும் வேலையை விடுதல் கூடாது .வேலையில் அடிக்கடி விடுமுறை கூடாது . நண்பர்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும்.

உற்பத்தித்துறை ,விவசாயத்துறை எதிர்பார்த்த நற்பலன்களை தருவதில் கால தாமதம் ஏற்படும். ஆடை ,ஆபரண அழகு சாதனத்துறை எதிர்பார்த்த பலன்கள் கிட்டும் ,ஓட்டல் உணவுப்பொருள்,பால் ,பழம் , காய்கறி வெள்ளி ,வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற இனங்களில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் .எலெக்ட்ரிக்கல் ,எலெக்ட்ரானிக்ஸ் ,தகவல்துறை ,போக்குவரத்து ,செய்தித்தொடர்பு ,விமானத்துறையில் எதிர்பார்த்த பலன்களை அனுபவிப்பார் .பள்ளி ,கல்லூரி ,பல்கல்லைக் கழக ஆசிரியர்கள் ,ஊழியர்கள் நற்பலன் அடைவர் சிறு வியாபாரம் செய்பவர்கள் ,ரோட்டோரம் தொழில் புரிபவர்கள் நற்பலன் அடைவர் .

புதன் கிழமை தோறும் ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் ,சந்திர மௌலீஸ்வரரையும் , வணங்கி வர நற்பலன்கள் ஏற்படும். எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum