அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போராட்டக்காரர்களை பாதுகாக்க போர்ட் படையினருக்கு ஏமன் அதிபர் உத்தரவு

Go down

போராட்டக்காரர்களை பாதுகாக்க போர்ட் படையினருக்கு ஏமன் அதிபர் உத்தரவு Empty போராட்டக்காரர்களை பாதுகாக்க போர்ட் படையினருக்கு ஏமன் அதிபர் உத்தரவு

Post by theepan Fri Feb 25, 2011 6:23 am

ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே அரசு ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இரு தரப்பினருக்குமிடையே நேரடிச் சண்டை ஏற்படாது தடுக்க படையினரை கேட்டுக் கொண்டுள்ளார். போராட்டம் தொடங்கிய இந்த இரு வாரங்களில் 15 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆளுங்கட்சியிலிருந்து 9 பேர் இது வரை விலகி விட்டனர்.

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு படைகள் எல்லா கலவரங்களையும் அடக்கி இரு தரப்பினருக்கும் இடையில் சண்டை நேராதவாறு பார்த்துக் கொள்ளும் என்று ஏமன் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தலைநகர் சனாவில் மறியல் செய்ய முயன்ற இரு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். அடேன் நகரில் கலவரத்தை அடக்க பொலிஸ் கண்ணீர் புகை தீக்குண்டுகளை பயன்படுத்தினர்.

அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும். வேலையில்லா திண்டாட்டமும், ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் ஏமன் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் முடிவாக 2013 ல் தன் பதவி காலம் முடியும் போது விலகி விடுவதாக அதிபர் உறுதி அளித்துள்ளார்.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்
» தடுப்புக்காவலில் உள்ள 676 புலி உறுப்பினர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரை
» தமிழக மீனவர்களையும், இலங்கை தமிழர்களையும் இந்திய அரசு பாதுகாக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
» அசாஞ்சை சுவீடனுக்கு நாடு கடத்த உத்தரவு
» முன்னாள் போராளிகள் மீது பழியை சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum